Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுடன் பேச்சுவார்தை நடத்த குழு: உச்சநீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (14:12 IST)
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஹரியானா பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 49 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் ஒரு பக்கமும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு இன்னொரு பக்கமும் பிடிவாதமாக இருப்பதன் காரணமாகவும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே உள்ளது 
 
இந்த நிலையில் 49 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களுக்கு தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் வாக்குவாதத்தால் பகை ஏற்படலாம்! இன்றைய ராசி பலன்கள் (20.08.2025)!

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments