Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானி குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (16:44 IST)
அம்பானி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிளஸ் பாதுகாப்பை நீக்க வேண்டுமென்ற மனுவில் உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை ஹிமான்ஷு அகர்வால் என்பவர் தாக்கல் செய்தார். அவரது மனுவில் அம்பானி குடும்பத்தினரால் பணம் செலவு செய்யமுடியும். அதனால் அவர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்க தேவையில்லை எனக் கூறியிருந்தார். இதே மனுவை அவர் மும்பை உயர்நீதிமன்றத்திலும் தொடர்ந்திருந்தார். ஆனால் மனுவை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இப்போது உச்சநீதிமன்றமும் பாதுகாப்பை நீக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனக் கூறியுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதை உறுதிசெய்வது அரசின் கடமையாகும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments