Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிப்பெண் சான்றிதழை வழங்காமல் இழுத்தடித்த கல்லூரி முதல்வர்.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவன்..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (16:12 IST)
மதிப்பெண் சான்றிதழை வழங்காமல் இழுத்து அடித்த கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் என்ற பகுதியில் பார்மசி கல்லூரி ஒன்றில் முதல்வராக இருப்பவர் 50 வயதான ஷர்மா. இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கும்போது அவரை வழிமறித்த மாணவன் தன்னுடைய மதிப்பெண் சான்றிதழை வழங்கிட வேண்டும் என்றும் கூறினார் 
 
அப்போது அவர் சரியாக பதில் கூறாததால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி வைத்து கொளுத்தி விட்டான். இதனால் படுகாயம் அடைந்த கல்லூரி முதல்வர் தற்போது 90 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து மாணவரை கைது செய்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments