Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தேசிய கீத விவகாரம் – பிரதமர் தலையிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல் !

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (14:40 IST)
இலங்கையின் சுதந்திர தின விழாவில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்ற முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரே ஒரு மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுவதை இதற்கு முன்னுதாரணமாக இலங்கை அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் ‘இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் இசைப்பது என்ற முடிவு கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான பெரும்பான்மைவாதம் இலங்கையில் உள்ள தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தும். பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments