Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து: நிதிஷ் குமார் பேட்டி

Advertiesment
Nitish
, வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:34 IST)
மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து தருவோம் என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார்
 
 வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரை மையமாக வைத்து இந்த தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அனேகமாக அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து தருவோம் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்துள்ளார்
 
 பாஜக அல்லாத கூட்டணி ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து தருவோம் என்றும் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான 7 வழக்குகள் ரத்து!