Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2024 தேர்தலில் நிதிஷ் குமார், சோரனுடன் கைகோர்ப்போம்: மம்தா பானர்ஜி

Advertiesment
mamtha
, வியாழன், 8 செப்டம்பர் 2022 (20:15 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் நிதீஷ் குமார் மற்றும் சோரன் ஆகியவர்களுடன் இணைந்து கைகோர்த்து தேர்தலை சந்திப்போம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வருகிற பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியை செய்ய வேண்டுமென்றும் மம்தா கேட்டுக்கொண்டுள்ளார் 
 
தற்போது டெல்லியில் இருக்கும் நிதிஷ்குமார் அரசியல் தலைவர்களை சந்தித்து வருவதாகவும் அவருடைய கடின உழைப்பு கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற உதவும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்
 
நிதீஷ் குமார் மற்றும் சோரன் ஆகியவர்களுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்றும் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்டால் அது ஒருபோதும் நடக்காது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன்: அன்புமணி ராமதாஸ்