Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கும் சோனியாகாந்தி - மன்மோகன்சிங்!

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கும் சோனியாகாந்தி - மன்மோகன்சிங்!
, திங்கள், 23 செப்டம்பர் 2019 (08:35 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறி கடந்த ஆகஸ்டு 21-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் இருந்து வந்த ப.சிதம்பரம் செப்டம்பர் 5-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின்படி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
 
இந்த நிலையில் 14 நாட்கள் சிறைவாசம் செப்டம்பர் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் அவர்களை அக்டோபர் 3 ஆம் தேதி வரை சிறைகாவலை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே மீண்டும் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
 
இந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை இன்று காலை 9 மணிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பில் சில முக்கிய ஆலோசனைகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று அதிமுக, நாளை திமுக: சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்!