Publish Date: Sat, 20 Jun 2020 (22:26 IST)
Updated Date: Sat, 20 Jun 2020 (22:28 IST)
நாளை 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சூரிய கிரகணம் ஏற்படுவதையொட்டி கோவில்கள் மூடப்பட்டு கிரகணம் முடிந்த பிறகு கோவிகள் நடை திறக்கப்படும் சம்ரோட்சண பூஜை நடைபெறும் எனவும் இதையடுத்து கோவில்கள் சுத்தப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் நாளை காலை 10: 38 மணி தொடங்கி மதியம் 1:38 மணிக்கு முடிகிறது. ஆகையால் திருப்பதி கோவிலில் முன்கூட்டி 21 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு மதியம் 2:30 மணிக்கு திறக்கவுள்ளனர். அதன்பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 மணிநேரம் கோவில் மூடப்படுவதால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.