Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய்களை அள்ளி வீசுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் : ஸ்மிருதி இரானி

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (09:55 IST)
குஜராத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் பொய்களை அள்ளி வீசுகிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்
 
பாஜக மகளிரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்மிரிதி இராணி, ‘ஆம் ஆத்மி பாஜக தொண்டர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது என்று கூறுவது பொய் என்றும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியிடம் வாரணாசி தொகுதியில் எப்படி போட்டியிட்டு தோல்வி அடைந்தாரோ, அதேபோல் குஜராத் சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைவார் என்று தெரிவித்துள்ளார்
 
குஜராத் மக்களுக்காக வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார் என்றும் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றும் ஆனால் ஆம் ஆத்மி டெல்லியில் பேருந்து வாங்குவதில் கூட ஊழல் செய்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments