Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த  பிரதமர் மோடி
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:08 IST)
குஜராத்தின் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டு போட்டிகளை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நாட்டின் 36 வது தேசிய விளையாட்டுப்  போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், உள்ளிட்ட 6 நகரகளில்  நடத்தப்படுகிறது.

இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இதன் தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்.

35 வது தேசிய போட்டிகள் கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு கோவாயில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரொனா தொற்றுப் பாதிப்பால், நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில், 36 விளையாட்டுகளில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் பங்கேற்றுள்ளனர். மேலும், 28 மா நிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து விபத்து ..7 பேர் மாயம்