Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்! – உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (12:33 IST)
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பல சிறு, குறு நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் அபாயத்திற்கு உள்ளாகியிருப்பதாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோன தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தியும் பொருளாதாரமும் கூட பெரும் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசு அனைத்து தொழில்நிறுவனங்களுக்கும் உதவுவதற்காக 20 லட்சம் கோடி கடனுதவிகளை அறிவித்தது.

இந்நிலையில் அகில இந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சிறு, குறு தொழில்செய்வோர், தொழில்முனைவோர், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இதுகுறித்து விவாதித்துள்ளது. அதில் 37% சுயதொழில் புரிவோரும், 35% சிறு,குறு நிறுவனங்களும் மீட்க முடியாத அளவிற்கான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக தெரிய வந்துள்ளது, மேலும் 32% சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பழைய நிலைக்கு மீள ஆறுமாத காலத்திற்கு மேலாகும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சிறு நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் அபாயத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments