Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச பொம்மைகளை அகற்ற வேண்டும்:சிவ சேனா ஆர்ப்பாட்டம்

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (16:55 IST)
மும்பையில் துணிக்கடைகள் வாசலில் வைக்கப்படும் ஆபாச பொம்மைகளை அகற்றும் போராட்டத்தில் சிவ சேனா அமைப்பினர் இறங்கியுள்ளனர்.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவ சேனா அமைப்பினர் மராட்டியர்களின் உரிமைக்காகவும், மராட்டிய கலாச்சாரத்தை காப்பதற்காகவும் பல போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மும்பையின் விலே பார்லே பகுதியிலுள்ள துணிக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பொம்மைகளை அகற்றவேண்டும் என சிவ சேனா அமைப்பினர் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து சிவ சேனாவை சேர்ந்த மகளிர் அணியினர் விலே பார்லே பகுதியிலுள்ள துணிக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பொம்மைகளை அகற்றினர்.

மேலும் இதனைத் தொடர்ந்து பிற பகுதிகளிலுள்ள ஆபாச பொம்மைகளைய்யும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சிவ சேனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments