சிங்கப்பூரில் சாகச விளையாட்டின்போது விபரீதம்.. பிரபல பாடகர் பரிதாப மரணம்..!

Siva
வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (17:35 IST)
பிரபல அசாமிய பாடகரும் இசையமைப்பாளருமான ஸுபீன் கார்க், சிங்கப்பூரில் சாகச விளையாட்டு ஒன்றில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
 
52 வயதான ஸுபீன் கார்க், அசாமிய, ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். குறிப்பாக, "யா அலி" என்ற பாடல் இவருக்கு பரவலான புகழை பெற்றுத் தந்தது.
 
சிங்கப்பூரில் நடைபெறும் வடகிழக்கு திருவிழாவில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்த ஸுபீன், செப்டம்பர் 18ஆம் தேதி இரவு ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார். உயிருக்கு போராடிய அவரை சிங்கப்பூர் காவல்துறையின் மீட்புப்படையினர் உடனடியாக மீட்டனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
அவர் பாராகிளைடிங் சாகசத்தின்போது விபத்தில் சிக்கியதாக சில தகவல்கள் கூறுகின்றன.
 
ஸுபீனின் திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments