Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலைக்கு செல்லாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.40,000 வழங்கும் திட்டம்: இன்று முதல் அமல்..!

Advertiesment
சிக்கிம்

Mahendran

, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (09:56 IST)
சிக்கிம் மாநிலத்தில், வேலைக்கு செல்லாத குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை, மாநில முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு ரூ.128 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல் கட்டமாக, 32,000 குடும்பத் தலைவிகளுக்கு முதல் தவணையாக ரூ.20,000 வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிதியுதவி, பெண்களின் தினசரி செலவுகளுக்கும், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்கும் உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.
 
சிக்கிம் மாநிலத்தில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) என்ற கட்சி ஆட்சியில் உள்ளது. மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில், இக்கட்சி 31 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று, மாநிலத்தில் வலுவான நிலையில் உள்ளது. இம்மாநிலத்தில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது, மாநில மக்கள் ஆளும் கட்சிக்கு அளித்துள்ள ஆதரவை காட்டுகிறது. இந்த திட்டம், மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதோடு, மாநிலத்தின் சமூக நலத் திட்டங்களில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.640 சரிவு.. மீண்டும் ரூ.75000க்குள் விற்பனை..!