Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

Siva
புதன், 25 டிசம்பர் 2024 (07:51 IST)
70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 35 வயது நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீன் பெற்று வெளியே வந்து மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது குஜராத் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள 70 வயது மூதாட்டியை கடந்த 15ஆம் தேதி, 35 வயது ஷைலேஷ் என்ற நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சொன்னால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மூதாட்டியை மிரட்டி உள்ள நிலையில், அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார்.

உடனே வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஷைலேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் அதே மூதாட்டியை சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நபர், ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவரம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்