Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ்னு கூட பாக்கல..! வக்கீல், போலீஸ் சுட்டுக்கொலை! – அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வீடியோ!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (11:59 IST)
உத்தர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜ் பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக இருந்த வழக்கறிஞர் மற்றும் காவலர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜூ பால் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். உத்தரபிரதேசத்தை உலுக்கிய இந்த கொலை குறித்த வழக்கு இன்னும் நடந்து வரும் நிலையில் இதில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தவர் உமேஷ் பால். வழக்கறிஞரான இவர் கொலை சாட்சியமாக இருப்பதால் போலீஸ் காவல் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காவலர் ஒருவர் பாதுகாப்புடன் உமேஷ் பால் துமன்கஞ்ச் என்ற பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரையும், அவருக்கு பாதுகாப்பிற்கு வந்த காவலரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது மர்ம கும்பல் உமேஷ் பாலை சுட்டுக் கொன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments