Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ஜெசிகா தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!

jesica
, சனி, 24 செப்டம்பர் 2022 (18:38 IST)
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஜெசிகா  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை பவுலின் ஜெசிகா என்ற நடிகை  செப்டம்பர் 17 ஆம் தேதி  தூக்கிட்டுச் செனறு கொண்டார். இது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் வாய்தா, துப்பரிவாளன் உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளனர் ஜெசிகா பவுலின். இவர்  நேற்று, ஆட்டோவில் இருந்து இறங்கி,  தன் வீட்டிற்குச் செல்ல மாடிப் படி ஏறும்போது மிகவும் சோர்வுடன் சென்றார்.

இதற்கான சிசிடிவி வீடியோ அன்று வெளியானது.   மேலும், ஜெசிகாவின் காதலனின் நண்பர் பிரபாகரன்  பதற்றத்துடன் வீட்டிற் வரும் காட்சிகளும் வெளியானது.

எனவே, காதல் விவகாரத்தில் ஜெசிகா தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வந்த நிலையில், சினிமா படத் தயாரிப்பாளர் சிராஜை அவர் காதலித்து வந்ததாகவும் தகவல் வெளியானது.

மேலும், சிவராஜின் நண்பர் பிரபாகரனிடம் போலீஸார் விசாரித்ததில், ஜெசிகாவின் 3 போன்கள், ஒரு கேட் உள்ளிட்டவை கைப்பற்றுள்ளது.  இந்த ஐ -போனை சிராஜ் வாங்கிக் கொடுத்துள்ளார். விசாரணைக்கு சிராஜ் இன்னும் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டது.
இந்த  நிலையில்,   இந்த வழக்கில்  தற்போது ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.



ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த நடிகை பவுலின் ஜெசிகா. இவர், சினிமாவில் நடிக்கவும் ஆர்வத்தில்,  4 ஆண்டுகளுக்கும் முன் விருகப்பாக்கம் மல்லிகை அவேன்யூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்துத் தனியாக வசித்து வந்துள்ளார்.

டிக்டாக்கில் கணக்கு வைத்திருந்ததன் மூலம் ரசிகர்கள் அவருக்கு உருவாகினர்.  இதன் மூலம், முன்னணி நடிகர்களின் படங்களில் துணைவேடத்தில்  நடித்துவந்தார்.

இந்த நிலையில்,இவர் மரணம் தொடர்பாக காதலன் சிராஜூதீனை சம்மன் அனுப்பியும் இன்னும் விசாரணைக்கும் ஆஜாராகவில்லை என்பதால், அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு