Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:

Advertiesment
ஐஐடி பாம்பே

Siva

, வியாழன், 26 ஜூன் 2025 (08:08 IST)
ஐஐடி மும்பை கல்வி நிறுவனத்தில் பிலால் அகமது ஃபயாஸ் அகமது என்ற நபர், மாணவர் போல் வேடமிட்டு, 14 நாட்கள் வளாகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
 
இந்த அத்துமீறல் முதலில் ஜூன் 4 ஆம் தேதி கவனிக்கப்பட்டது. CREST துறையின் அதிகாரி ஷில்பா கோட்டிக்கல், தனது அலுவலகத்திற்குள் ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் நுழைவதை கண்டார். அவரிடம் அடையாள அட்டை கேட்டபோது, அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.
 
சில நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு விரிவுரையாளர் அறையில் அமர்ந்திருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக வளாக பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஐஐடி மும்பை வளாகத்தில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. மாமியாரும் உடந்தை.. கொலை வழக்கில் திடீர் திருப்பம்..