Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும்: அறக்கட்டளை திடீர் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:49 IST)
ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என அறக்கட்டளை நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் மிகவும் பிரபலம் என்பதும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஷீரடி சாய்பாபா கோவிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனை கண்டித்து மே ஒன்றாம் தேதி முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என கோவில் அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் திரளாக பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மத்திய பாதுகாப்பு தொழில் படையினரால் பக்தர்களை சரியாக கையாள முடியாது என அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments