Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும்: அறக்கட்டளை திடீர் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:49 IST)
ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என அறக்கட்டளை நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் மிகவும் பிரபலம் என்பதும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஷீரடி சாய்பாபா கோவிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனை கண்டித்து மே ஒன்றாம் தேதி முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என கோவில் அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் திரளாக பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மத்திய பாதுகாப்பு தொழில் படையினரால் பக்தர்களை சரியாக கையாள முடியாது என அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments