Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை-கோவை ரயில்வே சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:44 IST)
மதுரை கோவை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சற்று முன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கோவை ரயில்வே கோட்டத்தில் போத்தனூர் ரயில் நிலைய பாலத்தில் இரும்பு கர்டர்களை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. எனவே ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
 
இதன்படி மதியம் 12.15 மணிக்கு கோவை சென்றடையும் மதுரை - கோவை ரயில் இந்த இரண்டு நாட்களும் மதுரையிலிருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் போத்தனூர் - கோவை இடையே ரத்து செய்யப்படும்.
 
அதேபோல் கோவை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் கோவை-மதுரை ரயில் இரண்டு நாட்களுக்கு கோவைக்கு பதிலாக போத்தனூரில் இருந்து மதியம் 2.52 மணிக்கு புறப்படும். 
 
இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments