மோடியை அடுத்து அத்வானியையும் புகழ்ந்த சசிதரூர்.. காங்கிரஸ் கட்சி அதிருப்தி..!

Mahendran
திங்கள், 10 நவம்பர் 2025 (17:27 IST)
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் எம்.பி., பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது, காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அத்வானியின் நீண்ட கால அரசியல் சேவையை பாராட்டிய சசி தரூர், நேரு மற்றும் இந்திரா காந்தியை மேற்கோள் காட்டி, அத்வானிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
சசி தரூரின் இந்தக் கருத்தில் இருந்து கட்சி விலகி இருப்பதாக காங்கிரஸ் ஊடக துறைத் தலைவர் பவன் கேரா தெரிவித்தார். "இது சசி தரூரின் தனிப்பட்ட கருத்து’ என்றும் அவர் கூறினார்.
 
மேலும், "காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக இருக்கும் அவர் தொடர்ந்து இப்படி செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் பவன் கேரா வெளிப்படையாக விமர்சித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது மோடியை புகழ்ந்த சசி தரூர், தொடர்ந்து பாஜக தலைவர்களை பாராட்டி வருவது, அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

பின்லேடனின் பேச்சை மொபைல் போனில் வைத்திருந்தமென்பொறியாளர் கைது.. டெல்லி சம்பவத்திற்கு தொடர்பா?

மோடி எங்கள் டாடி.. நாங்கள் சொன்னால் கேட்பார்: ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் 78% SIR படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் தகவல்!

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments