Publish Date: Mon, 16 May 2022 (09:55 IST)
Updated Date: Mon, 16 May 2022 (10:18 IST)
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் படுவீழ்ச்சி அடைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சுமார் 576 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து 53375 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 965 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது