Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 கோடிக்கு கார் வெச்சுருப்பீங்க, ஆனா நிவாரண நிதிக்கு சில லட்சம் தானா? நடிகர்களை விளாசும் சீனியர் நடிகை

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (11:20 IST)
4 கோடி ரூபாய்க்கு கார் வைத்திருக்கும் நடிகர்கள், கேரள வெள்ள நிவாரண நிதிக்காக சில லட்சங்கள் மட்டுமே கொடுக்க முடியுமா என நடிகர்களை சீனியர் நடிகை ஷீலா விளாசியுள்ளார்.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 483 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டது.
தமிழ் நடிகர் லாரன்ஸ் வெள்ள நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாயும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் 1 கோடி ரூபாயும், ஏ.ஆர்.ரஹ்மான் 1 கோடி ரூபாயும் கொடுத்துள்ளனர்.
 
ஆனால் கேரள நடிகர்கள் சில லட்சங்களை மட்டுமே நிவாரண நிதியாக அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபமடைந்த சீனியர் நடிகை ஷீலா, பல முன்னணி மலையாள நடிகர்கள் 4 கோடி ரூபாய்க்கு கார் வைத்துள்ளார்கள். ஆனால் அவர்களால் வெள்ளத்தால் உடைமைகளை இழந்து பரிதவித்து வரும் கேரள மக்களுக்கு சில லட்சங்கள் மட்டுமே நிவாரண நிதியாக வழங்க முடிகிறது.
 
அவர்களின் இந்த உயர்ந்த நிலைக்கு காரணம் கேரள ரசிகர்களே. அந்த நன்றி உணர்வு கூட பல நடிகர்களுக்கு இல்லை என ஷீலா ஆவேசமாக பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments