Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது வகுப்பறை கட்டிய அரசு பள்ளி ஆசிரியர்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (15:32 IST)
சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது வகுப்பறை கட்டிய அரசு பள்ளி ஆசிரியர்!
சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது வகுப்பறை ஒன்றைக் கட்டி அதன் மூலம் ஆன்லைன் வகுப்பு எடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் வகுப்புகள் தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு சில கிராமப்பகுதிகளில் இன்டர்நெட் சிக்னல் கிடைக்கவில்லை என்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்னல் கிடைப்பதற்காக மாணவர்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று ஆன்லைன் வகுப்புகளை செல்போன் மூலம் படித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் குடகு என்ற மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இண்டர்நெட் சிக்னல் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அருகில் இருந்த மாமரத்தின் மீது சிறிய வகுப்பறை ஒன்றை கட்டி அதில் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார். இந்த ஆரம்ப பள்ளி ஆசிரியருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments