Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார் எதிரொலி: திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் நீக்கம்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (15:30 IST)
பாலியல் புகார் காரணமாக திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவர் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் ஒரு சில ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் பள்ளிகள் மட்டுமன்றி கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து உள்ள தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவர் சந்திரமோகன் என்பவர் அவரிடம் படித்த மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தமிழ்த் துறையில் பட்ட மேற்படிப்பு படித்த சில மாணவிகள் புகார் அளித்துள்ளார் 
 
இந்த புகாரை அடுத்து கல்லூரி நிர்வாகம் தமிழ் துறை தலைவர் பால்சந்திரமோகனை நீக்கி நடவடிக்கை எடுத்து உள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாக மாணவிகள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்