Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் டீ, ஸ்னாக்ஸ் பரிமாறிய மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (20:21 IST)
மத்தியப்பிரதேச மாநிலத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் டீ, ஸ்னாக்ஸ் பரிமாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பால்ராங் சமரோ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பல மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்வி அமைச்சர் விஜய் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணர்கள் டீ, ஸ்னாக்ஸ் பரிமாறியுள்ளனர்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விஜய் ஷா கூறியதாவது:-
 
நிகழ்ச்சியில் பணிபுரிய வேலையாட்கள் உள்ளனர். ஆனால் மாணவர்கள் இதுபோன்ற பணிகள் செய்தால் விருந்தோம்பல் பண்பு வளரும் என கூறினார்.
 
இதையடுத்து கல்வி அதிகாரி அஞ்சு பந்தோரியா கூறியதாவது:-
 
மாணவர்கள் உணவு பரிமாறுவது பாரம்பரிய நிகழ்ச்சியாகும். இருப்பினும் பள்ளி மாணவர்களை வேலை வாங்குவது தவறு என்பதால், அவர்கள் பரிமாறுவதை நிறுத்தி விட்டேன் என்று கூறினார். இருப்பினும் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களை வேலை வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments