Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட எனக்கு ராகுல் காந்தி உதவி செய்தார்: சசிதரூர்

Advertiesment
Sasitharoor
, புதன், 5 அக்டோபர் 2022 (08:39 IST)
காங்கிரஸ் கட்சியை தலைவர் தேர்தலில் போட்டியிட எனக்கு ராகுல்காந்தி உதவி செய்தார் என சசிதரூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலில் சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மல்லிகாஜூர்னே கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால் இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதி என கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை திரும்பப் பெற பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர் என்றும் ஆனால் ராகுல் காந்தி மட்டுமே தேர்தலில் போட்டியிட ஆதரவு தெரிவித்தார் என்பதும் தேர்தலில் போட்டி இருப்பது நல்லதுதான் என்று அவர் கூறியதாகவும் சசி தரூர் தெரிவித்துள்ளார் 
 
நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என 10 வருடங்களுக்கு மேலாக ராகுல்காந்தி தன்னிடம் கூறியதாகவும் சசிதரூர் கூறியுள்ளார்
 

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் பெற்ற வீராங்கனைக்கு ராணுவத்தில் வேலை!