Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி: கட்சி உடைந்த நிலையில் சரத் பவார் பேட்டி..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (17:31 IST)
தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து அதிலிருந்து பிரிந்த அஜித் பவார் தலைமையிலான அணி ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணியில் இணைந்தது என்பதும் அஜித் பவார் துணை முதலமைச்சர் ஆகவும் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர் என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் கட்சி உடைந்த நிலையில் சரத் பவார் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய இருப்பதாவது: 2 நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி,  தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு முடிந்து போன கட்சி என்று  கூறினார்
 
NCP மீது நீர்ப்பாசன புகார் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார், ஆனால் எனது கட்சியினர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அமைச்சராகியுள்ளனர், இதன் மூலம் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லை என நிரூபணமாகியுள்ளது, இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என  தேசியவாத காங். தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments