Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பறிபோனது தேசியவாத காங்கிரஸ்.. புதிய கட்சியை தொடங்கினார் சரத்பவார்..!

பறிபோனது தேசியவாத காங்கிரஸ்.. புதிய கட்சியை தொடங்கினார் சரத்பவார்..!

Siva

, வியாழன், 8 பிப்ரவரி 2024 (07:20 IST)
சரத் பவாரை விட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி பறிபோன நிலையில் அவர் புதிய கட்சியை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று கூறிய நிலையில் தேர்தல் ஆணையமும் அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றும் அறிவித்தது.

இதனை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த சரத் பவார் அந்த கட்சியை இழந்த நிலையில் தற்போது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

அவருடைய புதிய கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் சந்திர பவார் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் விரைவில் இந்த கட்சிக்கு சின்னம் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா கூட்டணிக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டார் நிதிஷ்குமார்: காங்கிரஸ்