Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க பண்ணுன வேலைக்கு விருதே குடுக்கலாம்! – மாயாவதியை பங்கமாய் கலாய்த்த சஞ்சய் ராவத்!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (12:17 IST)
உத்தர பிரதேசத்தில் பாஜக வென்றுள்ள நிலையில் மாயாவதி, ஓவைசியை சிவசேனா சஞ்சய் ராவத் கிண்டல் செய்து பேசியுள்ளார்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 273 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜகவுக்கு பெரும் போட்டியாக விளங்கிய சமாஜ்வாடி கட்சி கூட்டணி 111 இடங்களை கைப்பற்றியுள்ளது.

சமாஜ்வாடி கூட்டணி கட்சிகளுக்கு பல இடங்களில் வாக்குகள் குறைந்ததற்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஓவைசியின் கட்சி போட்டியிட்டதே காரணம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து கிண்டலாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் “நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், அகிலேஷ் யாதவின் இடங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளது. மாயாவதி மற்றும் ஓவைசி பாஜகவின் வெற்றிக்கு பெரும் பங்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும்” என கிண்டலாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments