Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்வெட்டு ஏன் என கேட்க எனக்கு உரிமை உள்ளது: சாக்சி தோனி டுவிட்

sakshi dhoni
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:29 IST)
மின்வெட்டு ஏன் என கேட்க எனக்கு உரிமை உள்ளது: சாக்சி தோனி டுவிட்
நான் ஜார்கண்ட் மாநிலத்தில் வரி கட்டுகிறேன், எனவே மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்பதை கேள்வி கேட்க எனக்கு உரிமை உள்ளது என்றும் டுவிட்டரில் தோனியின் மனைவி சாக்சி டுவிட்  செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 ஜார்கண்ட் மாநிலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அம்மாநில பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கரி பற்றாக்குறை என ஒரு காரணத்தை கூறி பல மாதங்களாக மின்வெட்டு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது .
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்சி இதுகுறித்து தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஜார்கண்ட் மாநிலத்தில் வரி செலுத்துபவராக இங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வருகிறேன். இங்கு ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன் இந்த கேள்வியை கேட்க எனக்கு உரிமை உள்ளது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் .
 
இந்த கேள்விக்கு ஜார்கண்ட் மாநில மின்துறை அமைச்சர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா மர்ம மரணம்: ஆறுமுகச்சாமி கமிஷனின் விசாரணை முடிந்தது!