Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி - ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (10:54 IST)
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடியாக தீப்பளித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுமியை சாமியார் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
 
இதில் சாமியார் ஆசாராம் உள்பட 5 பேர் குற்றவாளியெனவும், தண்டனை விவரங்களை 2 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்போவதாகவும் ஜோத்பூர் நீதிமன்ற்ம் தெரிவித்துள்ளது.
 
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி, சாமியார் அடைக்கப்பட்டிருக்கும் ஜோத்பூர் சிறைக்கே சென்று வழங்கனார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 
இந்த தீர்ப்பையொட்டி உபி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்