Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு: சாமியார் ஆசாராமுக்கு தண்டனை கிடைக்குமா?

சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு: சாமியார் ஆசாராமுக்கு தண்டனை கிடைக்குமா?
, புதன், 25 ஏப்ரல் 2018 (10:02 IST)
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுமியை சாமியார் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.
 
இந்த தீர்ப்பையொட்டி உபி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி, சாமியார் அடைக்கப்பட்டிருக்கும் ஜோத்பூர் சிறைக்கே சென்று தீர்ப்பை வழங்கவிருப்பதால் சிறையை சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
webdunia
சாமியார் ஆசாராம்பாபுக்கு இந்தியா முழுவதும் குறிப்பாக  உபி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா  ஆகிய நான்கு மாநிலங்களில் ஆதரவாளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் தமிழருக்கு சிறைச்சாலை கோவில் போன்றது - மன்சூர் அலிகான்