Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை..! ஐயப்பனை தரிசிக்க பல மணி நேரம் காத்திருப்பு..!!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:57 IST)
மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.


 
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால,  மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது.  தொடக்கத்தில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. பக்தர்களை பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தி வைப்பதால் அவர்கள் தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு பகுதிகளில் போலீசார் பக்தர்களை தடுத்து நிறுத்தி அனுப்பி வைக்கின்றனர்.

இதனால்  பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனத்துக்காக வரும் 25-ஆம் தேதி வரை 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இதுதவிர உடனடி கவுண்டர்கள் மூலமும் முன்பதிவு செய்துள்ளதால், பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments