Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல், கனமழை வரும் முன்பே ரூ.900 கோடி தமிழகத்திற்கு கொடுத்துவிட்டோம்: நிர்மலா சீதாராமன்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:56 IST)
சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படும் முன்பும் தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் முன்பும் 900 கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
தேசிய பேரிடர் நிதியாக மிக்ஜாம் புயல் வருவதற்கு முன்பே 450 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு கொடுத்தாகிவிட்டது என்றும் அதேபோல் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி கனமழை பெய்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதியே 450 கோடி ரூபாய் கொடுத்தாகிவிட்டது என்றும் மொத்தம் 900 கோடி ரூபாய் மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியாக கொடுத்தாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார் 
 
தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கென தனியாக நிதியுதவி விடுவிக்கவில்லை என்றாலும் வழக்கமான பேரிடர் நிதிப்பங்கீட்டை தமிழகத்திற்கு வழங்கிவிட்டோம் என்று அவர் மேலும் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments