Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல், கனமழை வரும் முன்பே ரூ.900 கோடி தமிழகத்திற்கு கொடுத்துவிட்டோம்: நிர்மலா சீதாராமன்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:56 IST)
சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படும் முன்பும் தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் முன்பும் 900 கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
தேசிய பேரிடர் நிதியாக மிக்ஜாம் புயல் வருவதற்கு முன்பே 450 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு கொடுத்தாகிவிட்டது என்றும் அதேபோல் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி கனமழை பெய்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதியே 450 கோடி ரூபாய் கொடுத்தாகிவிட்டது என்றும் மொத்தம் 900 கோடி ரூபாய் மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியாக கொடுத்தாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார் 
 
தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கென தனியாக நிதியுதவி விடுவிக்கவில்லை என்றாலும் வழக்கமான பேரிடர் நிதிப்பங்கீட்டை தமிழகத்திற்கு வழங்கிவிட்டோம் என்று அவர் மேலும் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments