Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல், கனமழை வரும் முன்பே ரூ.900 கோடி தமிழகத்திற்கு கொடுத்துவிட்டோம்: நிர்மலா சீதாராமன்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:56 IST)
சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படும் முன்பும் தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் முன்பும் 900 கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
தேசிய பேரிடர் நிதியாக மிக்ஜாம் புயல் வருவதற்கு முன்பே 450 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு கொடுத்தாகிவிட்டது என்றும் அதேபோல் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி கனமழை பெய்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதியே 450 கோடி ரூபாய் கொடுத்தாகிவிட்டது என்றும் மொத்தம் 900 கோடி ரூபாய் மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியாக கொடுத்தாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார் 
 
தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கென தனியாக நிதியுதவி விடுவிக்கவில்லை என்றாலும் வழக்கமான பேரிடர் நிதிப்பங்கீட்டை தமிழகத்திற்கு வழங்கிவிட்டோம் என்று அவர் மேலும் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments