Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை நடைதிறப்பு- போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைப்பு

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (17:25 IST)
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பெண்களைக் கோயிலினுள் அனுமதிக்காமல் போராடி வந்த போலிஸ்காரர்கள் தடியடி நடத்திக் கலைத்துள்ளனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து  இந்து அமைப்புகளும் ஐய்யப்ப பகதர்களும் பாஜகவின் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் முற்றுகையிட்டு கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களை வழிமறிக்கும் போராட்டத்தில் காலையில் இருந்து ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனாலும் ஆளும் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து பெண்பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

போராட்டக்காரர்களை காலையில் இருந்து அமைதியாக கலைந்து செல்லுமாறு வலியுறுத்திய காவல்துறை சற்று முன்னர் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தது. இதனால் அந்த பகுதிகளில் கல்வீச்சு, வாகனங்களைத் தாக்குதல் போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்றன. செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

ஆனாலும் காவல்துறையின் உதவியோடு குறிப்பிட்ட நேரத்தில் சபரிமலைக் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments