சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

Siva
வியாழன், 20 நவம்பர் 2025 (08:24 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 80,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் சன்னிதானத்திலும் நடைபாதை நெடுகிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
 
பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் அதிகரித்ததன் காரணமாக, நேற்று முதல் ஸ்பாட் புக்கிங் மூலம் வழங்கப்படும் அனுமதி, நாள் ஒன்றுக்கு 5,000 பேராக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலையும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். 
 
நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால், பக்தர்கள் முன்கூட்டியே தரிசன நேரம் ஒதுக்கீடு செய்து வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments