Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் சபரிமலையில் குளிக்கலாம், தங்கலாம்! – பக்தர்கள் மகிழ்ச்சி!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (08:28 IST)
கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் சபரிமலை நிர்வாகம் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் சபரிமலையிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. முன்னதாக சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆற்றில் குளிக்கவும், தங்கவும் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் மெல்ல தளர்வுகள் அறிவித்துவரும் சபரிமலை தேவசம்போர்டு இன்று முதல் சபரிமலை வரும் பக்தர்கள் பம்பை நதியில் குளிக்கலாம் என்றும், சன்னிதானத்தில் தங்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments