Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 448 பேர்களுக்கு ஒமிக்ரான்: அதிர்ச்சியி இங்கிலாந்து அரசு

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (08:06 IST)
இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நானூற்று நாற்பத்தி எட்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டில் ஏற்கனவே 800க்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் நானூற்று நாற்பத்தி எட்டு பேருக்கும் ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அந்நாட்டில் மொத்தம் ஆயிரத்து 265 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments