ஐயப்பன் மாநாட்டில் ஆர் எஸ் எஸ் தலைவர்கள்.. கடுப்பான பழனிவேல் தியாகராஜன்!

Prasanth K
ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (12:19 IST)

கேரளாவில் நடைபெறும் ஐயப்பன் மாநாட்டில் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் முதலாவதாக பேச அனுமதிக்கப்பட்டதற்கு தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது.

 

தமிழகத்தில் முருகன் மாநாடு நடந்ததை போல கேரளாவில் இன்று பிரம்மாண்டமாக ஐயப்பன் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் பல்வேறு மத அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சி தலைவர்களும், மத தலைவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

மேடையில் அவர்கள் பேசுவதற்காக அமர்ந்திருந்த நிலையில் தொடர்ந்து ஆர் எஸ் எஸ் தலைவர்கள் பேச அனுமதிக்கப்பட்டதால் பழனிவேல் தியாகராஜன் கோபமடைந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கண்டித்து அவர் எழுந்து செல்ல முயன்ற நிலையில் அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் அமர வைத்ததுடன், அடுத்து அவரை பேச வைத்தனர். இதனால் சில நிமிடங்களுக்கு மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments