Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாட்ஸப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது: ராகுல்காந்தி

வாட்ஸப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது: ராகுல்காந்தி
, ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (17:04 IST)
இந்தியாவில் வாட்ஸ்அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திடீர் என புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது போலி செய்திகளை பரப்பி வருவதாகவும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ளார் 
 
ஃபேஸ்புக்கின் உண்மை நிலை குறித்து அமெரிக்க ஊடகங்கள் ஏற்கனவே வெளிக்கொண்டு வந்துள்ளனர் என்றும் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். ராகுல் காந்தியின் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மீதான இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞர் !