Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் வாங்கிய லாட்டரிக்கு ரூ.44 கோடி பரிசு.. பெங்களூரு நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (16:26 IST)
ஆன்லைனில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 44 கோடி பரிசு விழுந்ததை அடுத்து பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். பெங்களூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஆன்லைன் மூலம் வளைகுடா நாடான அபுதாபியில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலம் வாங்கினார். 
 
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி குலுக்கல் நடைபெற்ற போது அதில் முதல் பரிசான 20 மில்லியன் திர்ஹாம் அதாவது இந்திய மதிப்பில் 44 கோடி ரூபாய் பரிசு அருண்குமாருக்கு கிடைத்தது. இதனிடம் அவரிடம் தெரிவிப்பதற்காக லாட்டரி நிறுவனம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஆன்லைன் மோசடி நிறுவனமாக இருக்கும் என்று நினைத்து அந்த எண்ணை அவர் பிளாக் செய்துவிட்டார். 
 
அதன்பின்னர் அவரை வேறொரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு பரிசு கிடைத்திருப்பது உண்மைதான் என்றும் நேரடியாகவோ அல்லது வங்கி மூலமாகவோ அந்த பரிசு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து அருண்குமார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்..! அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு..!!

வேங்கை வயல் சம்பவத்தில் ஒருவர் கூட கைது செய்ய முடியாதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம்

மணிப்பூரில் ராகுல் காந்தி வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன் துப்பாக்கி சூடு.. பெரும் பரபரப்பு..!

தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம்..! கொலை நடக்காத நாளே இல்லை.! இபிஎஸ் காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments