Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (08:05 IST)
ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவால் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் தேகைமலையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு திருமணமாகி சுபிக்சன் (6), மெர்வின் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 14 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவின் குரேஸ் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பனிப்பாறைகள் சரிந்து சோதனை சாவடி முழுதும் மூடப்பட்டது. அதில் பாதுகாப்பு பணியில் இருந்த  தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமானம் மூலம் அவரது உடல் தமிழகத்தை வந்தடைகிறது. பின் அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments