Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஸ் சிலிண்டருக்கு ரூ.1.50 கூடுதல் வசூல்! 7 ஆண்டுகளாக நடந்த வழக்கு! - தீர்ப்பு என்ன தெரியுமா?

Prasanth Karthick
செவ்வாய், 7 ஜனவரி 2025 (14:54 IST)

மத்திய பிரதேசத்தில் கேஸ் சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலித்த ஏஜென்சி மீது வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கில் 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்துள்ளது.

 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் சுக்ரேஷ் ஜெயின் என்பவர் கடந்த 2017ம் ஆண்டில் பாரத் கேஸ் நிறுவன ஏஜென்சியில் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். அதற்காக சிலிண்டரை டெலிவரி செய்தவர் சுக்ரேஷிடம் ரூ.755 பெற்றுள்ளார். ஆனால் பில்லில் தொகை ரூ.753.50 என்று இருந்துள்ளது.

 

தன்னிடம் கேஸ் ஊழியர் ரூ.1.50 கூடுதலாக பெற்றதை தொடர்ந்து ஊழியரிடம் அதை சுக்ரேஷ் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கேஸ் நிறுவன ஏஜென்சி மீதும், ஊழியர் மீது சுக்ரேஷ் தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் முதலில் இவர் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

 

தொடர்ந்து 2019ம் ஆண்டில் மீண்டும் வழக்குப்பதிவு செய்துள்ளார். இப்படியாக கடந்த 7 ஆண்டுகளாக அவர் ரூ.1.50க்காக நடத்திய போராட்டத்தின் விளைவால் சுக்ரேஷ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. சுக்ரேஷுக்கு ரூ.4 ஆயிரம் இழப்பீடாக கேஸ் ஏஜென்சி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments