Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000க்கும் குறைவாக ஜியோவின் 4G மொபைல் அறிமுகம்! யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம்..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (07:28 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ரூபாய் 999க்கு 4ஜி மொபைல் அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ அவ்வப்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையை அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் ரூபாய் 999க்கு ஜியோவின் 4ஜி மொபைல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜூலை 7ஆம் தேதி இந்த மொபைல் அறிமுகமாக இருப்பதாகவும் ஜியோ பாரத் போன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த போனின் ஆரம்ப விலை ரூ.999 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த போனில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனை வாங்குபவர்களுக்கு 30% குறைவான விலையில் மொபைலுக்கு ரீசார்ஜ் பிளான்களும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments