Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவுக்கு மட்டுமல்ல, ஐயப்ப பக்தர்களுக்கும் ”ரெட் அலர்ட்”..

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (13:58 IST)
கேரளாவில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், சபரிமலையில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்துவரும் கனமழையால், சில நாட்களாக மாநிலத்தில், ”ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை அடிவாரமான பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவருகிறது. ஆதலால் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் பம்பையில் குளிக்ககூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பம்பை நதியின் வெள்ளப்பெருக்கால் நதியின் படிக்கட்டுகளையும் தாண்டி, பக்தர்கள் நடந்து செல்லும் மணல் பரப்பையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அதனருகிலுள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் திருவேணி பாலம் வழியாக சன்னிதானத்திற்கு செல்கின்றனர். பக்தர்கள் எச்சரிக்கையுடன் பம்பையை கடக்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments