Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை தீர்ப்பில் திடீர் மாற்றம்? மறு விசாரணைக்கு உத்தரவு

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (16:14 IST)
சபரிமலைக்கு அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களும் வரலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது ஐயப்ப பக்தர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு போராட்டங்களும் வெடித்தது. 
 
ஏற்கனவே, சபரிமலை தீர்ப்பை எதிர்த்து பல சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்கள் நவம்பர் 13 ஆம் தேதி அதாவது இன்று விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், இந்த சீராய்வு மனுக்கள் நீதிபதி அறையில் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 22 ஆம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமையில் விசாணைக்கு வரும். இதற்கு முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தீபக் மிஷ்ரா விசாரித்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது உள்ள சூழ்நிலையில் தீர்ப்பில் மாற்றம் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments