Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி கோவிலில் இருந்து எடைபோட்டு நாணயங்களை வாங்கும் ரிசர்வ் பேங்க்!

திருப்பதி கோவிலில் இருந்து எடைபோட்டு நாணயங்களை வாங்கும் ரிசர்வ் பேங்க்!
, வியாழன், 2 மே 2019 (09:44 IST)
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் அந்த கோவிலின் உண்டியலிலும் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கைகள் குவிந்து வருகிறது
 
இந்த காணிக்கைகளில் புழக்கத்தில் இல்லாத நாணயங்களும் வருவதுண்டு. இவ்வாறு புழக்கத்தில் இல்லாத நாணயங்கள் மட்டும் சுமார் 90 டன் அளவுக்கு கோவில் நிர்வாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புழக்கத்தில் இல்லாத நாணயங்களை தனியே எடுத்து பாதுகாத்து வைத்திருக்கும் திருப்பதி கோவிலின் தேவஸ்தான நிர்வாகம், இந்த நாணயங்களை வாங்கிக்கொள்ள ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்தது. இதனையடுத்து இந்த கோரிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.
 
இதன்மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் இருக்கும் 90 டன் புழக்கத்தில் இல்லாத நாணயங்களை எடை போட்டு, டன் ஒன்றுக்கு ரூ.27 ஆயிரம் விலை கொடுத்து வாங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் வெப்பத்தால் பள்ளி திறக்கும் தேதியில் மாற்றமா? செங்கோட்டையன்