Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

Advertiesment
Gold Rules by RBI

Mahendran

, சனி, 7 ஜூன் 2025 (10:09 IST)
இந்திய ரிசர்வ் வங்கி  புதிய அறிவிப்பின் மூலம், நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் பெற அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு, இந்த வரம்பு 75 சதவீதமாக இருந்தது. 
 
தற்போது ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு மட்டும் இந்த புதிய விதி பொருந்தும். ஒரே நபருக்கு ஒருமுறை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முந்தைய மாதங்களில், நகைக் கடன்கள் தொடர்பான பல கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி முன்மொழிந்தது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்வினை உருவானதால், மத்திய அரசு அந்த விதிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
புதிய அறிவிப்பு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக இருப்பதுடன், அவசர நிதி தேவைகளை சந்திக்க உதவியாக இருக்கும். குறிப்பாக, பொது வங்கிகள் 75% வரம்பை கடைப்பிடித்து வந்த நிலையில், சில தனியார் மற்றும் நிதி நிறுவனங்கள் 88% வரை கடன் வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
இது போன்ற நடவடிக்கைகள் நகைக் கடன் முறையை மேலும் சீரமைத்து, நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!