Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.. ரத்தன் டாடாவின் கடைசி சமூக வலைத்தள பதிவு..!

Siva
வியாழன், 10 அக்டோபர் 2024 (16:16 IST)
எனது உடல்நிலை குறித்து யாரும் போலியான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ரத்தன் தாத்தா வெளியிட்ட சமூக வலைத்தள பதிவுதான் அவரது கடைசி பதிவு என தெரிய வந்துள்ளது.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு 11:30 மணி ரத்தன் டாடா காலமான நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட்ட பலரும் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கை தான் அவரது கடைசி எக்ஸ் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பதிவில், “எனது உடல்நிலை குறித்து வெளியாகிக் கொண்டிருக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம். வயது மூப்பு மற்றும் அதனால் ஏற்படும் தொந்தரவுகளுக்கான பரிசோதனை மட்டுமே மேற்பட்ட மேற்கொண்டு வருகிறேன். என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், எனது உடல்நிலை குறித்து போலியான செய்திகளை பரப்ப வேண்டாம்” என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுதான் ரத்தன் டாடாவின் கடைசி பதிவு என்ற நிலையில், இந்த பதிவை பலரும் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்கள் கைது.. திருமண மண்டபத்தில் தங்கவைப்பு..!

உத்தர பிரதேசத்திற்கு 31ஆயிரம் கோடி.. தமிழகத்திற்கு 7 ஆயிரம் கோடி! - மத்திய அரசு ஒதுக்கிய வரிப்பகிர்வு!

பாஜகவில் இணைந்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா! 3 வாரங்கள் ஆலோசித்ததாக தகவல்..!

2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு..!

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது! மகாராஷ்டிரா சட்டசபையில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments